பக்கங்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

எவ்வளவு இடைவெளியில் பால் புகட்டவேண்டும்

குழந்தை எப்போதெல்லாம் உணவருந்த விரும்புகிறதோ அப்போதெல்லாம் உணவு புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் இது மிகவும் அடிக்கடி இருக்க கூடும். அதன்பிறகு குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் வரு‌ம்.

முதல் வாரங்களில் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு கேட்கக்கூடும்.

ஒருவேளை, குழந்தை அழுவதை எப்போதும் பசிக்குத்தான் என்று கருதக்கூடாது.

குழந்தை என்ன விரும்புகிறது என்பதை விரைவில் நீங்களாகவே அறிந்துகொள்வீர்கள்.

உங்கள் குழந்தை பசியோடு இல்லாவிட்டாலும் கூட, கொஞ்சமாக பாலை உறிஞ்சுவதும், தா‌யி‌ன் அருகில் இருப்பதும் அதற்கு ஆறுதலாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக