பக்கங்கள்

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மூளை சுறுசுறுப்பாக செயல்பட...

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.

எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்...

* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.

மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.

* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.

* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

சனி, 17 ஜூலை, 2010

பிறக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்பது ஆணிலேதான் தங்கியுள்ளது

இன்றும் பெண் குழந்தைகளைப் எடுத்தாலே பெண்களை குறை சொல்லும் மூட நம்பிக்கை இன்னும் நம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் ஒரு குழந்தை உருவாகும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

மனித உடலின் இயல்புகள் அனைத்தும் ஜீன் (gene) எனப்படும் பரம்பரை அலகுகளாலே தீர்மானிக்கப் படுகின்றன. இந்த ஜீன்கள் நிறமூர்த்தம்(chromosome) எனப்படும் அமைப்பிலே சேர்ந்து கலங்களின்(cell) கருவினுள்ளே இருக்கும்.

மனிதனில் மொத்தமாக 46 (23 சோடி ) நிறமூர்த்தங்கள் இருக்கும். இந்த நிறமூர்த்தங்களில் இருக்கும் ஜீன்களே ஒரு மனிதனின் இயல்புகளை தீர்மானிக்கும். அதாவது ஒருவரின் உயரம், நிறம், பால் போன்ற அனைத்து இயல்புகளும் இந்த ஜீன்களிலே ஏற்கனவே பதியப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு இயல்பையும் தீர்மானிக்கும் ஜீன்கள் சோடியாகவே காணப்படும்.

குழந்தை உருவாக்கம் நடைபெறுவது ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கருக்கட்டுவதால் என்று விளக்கமாக முந்திய இடுகைகளிலே பதிவிடிருந்தேன்.

மற்றைய மனிதனின் கலங்கள் போல் ஜீன்கள் சோடியாக இல்லாமல் தனியாகவே இந்த விந்து மற்றும் முட்டைக் காலங்களிலே இருக்கும். தனியாக இருக்கும் இந்த ஜீன்கள் விந்தும் முட்டையும் கருக்கட்டும் போது மீண்டும் சோடியாகி ஒரு மனிதனை உருவாக்கும்.

மனிதனின் பால் இயல்புகளை தீர்மானிக்கும் ஜீனானது XX அல்லது XY என்ற சோடிகளாக இருக்கலாம்.

அதாவது ஒருவரின் ஜீன் அமைப்பு XY என்றால் அது ஆண் குழந்தையாக உருவாகும் ஜீன் அமைப்பு XX என்றால் அது பெண் குழந்தையாக உருவாகும்.

அதாவது பெண்ணிலே இருக்கும் ஜீன் அமைப்பு XX ஆகவே ஒரு முட்டை உருவாகும் போது இந்த XX என்ற ஜீன் சோடி பிரிந்து முட்டையிலே X என்ற ஒரு ஜீனே இருக்கும்.

ஆனால் ஆண்களில் உள்ள XY என்ற ஜீன் சோடி பிரியும் போது அரைவாசி விந்துகள் X என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும் மற்றையவை Y என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும்.

இனி கருக் கட்டலின் போது பெண்ணின் முட்டையிலே உள்ள X ஜீனோடு ஆணின் X ஜீனைக் கொண்ட விந்து கருக்கட்டுமானால் உருவாகும் குழந்தை ,முட்டையின் X மற்றும் விந்தின் X என்ற ஜீன்கள் ஒன்று சேர்வதால் XX என்ற அமைப்பைப் பெற்று பெண் குழந்தையாக மாறும்.

மாறாக ஆணின் Y என்ற ஜீனைக் கொண்ட விந்துகள் முட்டையோடு கருக்கட்டினால் குழந்தை XY என்ற ஜீன் சோடியைப் பெற்று ஆணாக உருவாகும்.

ஆக குழந்தை ஆணாக உருவாகுவதா அல்லது பெண்ணாக உருவாகுவதா என்பது
அப்பாவின் விந்தில் X ஜீனைக் கொண்ட விந்தா அல்லது Y ஜீனைக் கொண்ட விந்த கருக்கட்டுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
இதற்கு பெண் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டாள்.

இனியாவது பெண் குழந்தை பெற்று விட்டாள் என்று பெண்களை திட்டாதீர்கள். அப்படியும் திட்ட வேண்டுமென்றால் ஆண்களைத் திட்டுங்கள்.

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

உங்கள் உடல் எடை சரியாக இருகிறதா

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3

இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  • உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
  • உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
  • உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
  • உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm

மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் யார்?


மாரடைப்பு  உட்பட்ட  இதய வலி நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகள்..

மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று மாற்ற  முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது.

ஆனால் அடுத்த வகையான காரணிகள் காட்டுப் படுத்தக் கூடியவை.

மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் , ஆனால் நம்மால் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள்.

நீரழிவு நோய் - இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைகுறைக்கலாம்.

புகைத்தல்- புகைத்தல் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் - சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன்  மூலம் நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக்  கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள்பாவிக்கப்படலாம்.

உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) - இந்த நோய் இருப்பவர்களுக்கு  மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம்(stressful life) - அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

அதிகரித்த உடற்பருமன்(Obesity)- நமது உடல் நிறையை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும்.

புதன், 7 ஜூலை, 2010

டயட் கேக்

டயட் கேக்



தேவையான பொருள்கள்:
-------------------------------
கோதுமை மாவு-1/2கப்
ராகி
மாவு-1/4கப்

கொள்ளு
மாவு-1/4கப்

எண்ணை
-3தேக்கரண்டி

சீனி
-5டீஸ்பூன்

முட்டை
-1வெள்ளை கரு மட்டும்

வெண்ணிலா
எசென்ஸ்-1ஸ்பூன்

கெலாக்ஸ்
-3டீஸ்பூன்
பேக்கிங்
பவுடர்-1டீஸ்பூன்

உப்பு
-தேவையான அளவு
செய்முறை
:

----------------
முதலில்
எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும்.

அதன்
பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,கெலாக்ஸ்

எல்லாவற்றையும்
போட்டு நன்கு கலக்கவும்.
ஒரு
பாத்திரத்தில் முட்டையின் வெண் கரு,எண்ணை,

சீனி
எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.

பின்
அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கவும்

அதில்
வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்

எல்லாம்
சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில்
எண்ணை
தடவி
அதில் கேக் கலவை ஊற்றவும் அதன் மேல் சிறிது
கெலாக்ஸை தூவி
பின் 250 *F -ல் 25 நிமிடம் பேக் செய்யவும்.

சளி பிடிக்காமல் இருக்க

சளி பிடிக்காமல் இருக்க:



சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது.
அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல்
தடுக்க உதவியாய் இருக்கிறது.

நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால்
மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று
முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

FOOD AS MEDICINE

FOOD AS MEDICINE



BONE PROBLEMS? EAT PINEAPPLE!!!
Bone fractures and osteoporosis can be prevented by the manganese in pineapple.

PREMENSTRUAL SYNDROME? EAT CORNFLAKES!!!!
Women can ward off the effects of PMS with cornflakes, which help reduce depression, anxiety and fatigue.

MEMORY PROBLEMS? EAT OYSTERS!
Oysters help improve your mental functioning by supplying much-needed zinc.

COLDS? EAT GARLIC!
Clear up that stuffy head with garlic. (remember, garlic lowers cholesterol, too.)

COUGHING? USE RED PEPPERS!!
A substance similar to that found in the cough syrups is found in hot red pepper. Use red (cayenne) pepper with caution-it can irritate your tummy.



BREAST CANCER? EAT Wheat, bran and cabbage
Helps to maintain estrogen at healthy levels.


LUNG CANCER? EAT DARK GREEN AND ORANGE AND VEGGIES!!!
A good antidote is beta carotene, a form of Vitamin A found in dark green and orange vegetables.

ULCERS? EAT CABBAGE ALSO!!!
Cabbage contains chemicals that help heal both gastric and duodenal ulcers.

DIARRHEA? EAT APPLES!
Grate an apple with its skin, let it turn brown and eat it to cure this condition. (Bananas are good for this ailment)


CLOGGED ARTERIES? EAT AVOCADO!
Mono unsaturated fat in avocados lowers cholesterol.

HIGH BLOOD PRESSURE? EAT CELERY AND OLIVE OIL!!!
Olive oil has been shown to lower blood pressure.
Celery contains a chemical that lowers pressure too.

BLOOD SUGAR IMBALANCE? EAT BROCCOLI AND PEANUTS!!!
The chromium in broccoli and peanuts helps regulate insulin and blood sugar.

Kiwi: Tiny but mighty. This is a good source of potassium, magnesium, Vitamin E &fiber. It's Vitamin C content is twice that of an orange.

Apple: An apple a day keeps the doctor away? Although an apple has a low Vitamin C content, it has antioxidants &flavonoids which enhances the activity of Vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.

Strawberry: Protective fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits &protects the body from cancer causing, blood vessels clogging free radicals. (Actually, any berry is good for you..they're high in anti-oxidants and they actually keep us young.........blueberries are the best and very versatile in the health field........they get rid of all the free-radicals that invade our bodies)

Orange: Sweetest medicine. Taking 2 - 4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessen the risk of colon cancer.

Watermelon: Coolest Thirst Quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients
found in watermelon are Vitamin C &Potassium. (watermelon also has natural substances [natural SPF sources] that keep our skin healthy, protecting our skin from those darn suv rays)


Guava &Papaya: Top awards for Vitamin C. They are the clear winners for their high Vitamin C content. Guava is also rich in fiber which helps prevent constipation.

Papaya is rich in carotene, this is good for your eyes. (also good for gas and indigestion)


Tomatoes are very good as a preventative measure for men, keeps those prostrate problems from invading their bodies

நான்-&ஸ்டிக்

நான்-&ஸ்டிக்


உங்கள் வீட்டில் நான்-&ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.

அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான்-&ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.

மேலும், முட்டை பொரிப்பதற்கு இதுபோன்ற நான்-&ஸ்டிக் வாணலி அல்லது தவாவைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.

அதோடு நாம் சமைக்கும் சமையலில் எண்ணை குறைவாக சேர்க்க
நினைப்போம் ஆனால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பாத்திரத்தில்
அதிகமாக எண்ணை சேர்க்க வேண்டியாதக இருக்கும் ஆனால
நான்-&ஸ்டிக்கில் எண்ணை கம்மியாக ஊற்றினாளே போதும்
அதனால் ஆரோக்கியமான வாழ்விற்க்கு
நான்-&ஸ்டிக்கே சிறந்தது
எதுவாக இருந்தாலும் நான்-&ஸ்டிக் பொருட்களில் அதற்கென இருக்கும் மரக் கரண்டியை மட்டும் பயன்படுத்தவும். மிருதுவான நார்களைக் கொண்டு தேய்த்து கழுவினால் நீண்ட நாளைக்கு நான்&ஸ்டிக் தவாக்கள் நிலைத்து வரும்.

முக்கியமான பழங்கள்! 1

முக்கியமான பழங்கள்! 1


நாம் தினமும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வகையான பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் நம் உடம்பிற்கு நல்லது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிடலாம். ஒருநாளைக்கு அதிகப் பட்சம் 400கிராம் அளவாவது பழங்கள் சாப்பிட வேண்டும். இதற்க்கு பதிலாக மற்ற உணவுகளின் அளவை குறைத்து சாப்பிடலாம்.
ஆப்பிள்:
தினமும் உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்ற ஆப்பிள் சாறு சாப்பிடுவது நல்லது. இன்றைய கண்டுபிடிப்பு ஆப்பிளில் உள்ள வைட்டமின் (சி) மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று ஆரோக்கியம்,சக்தி, இளமை என்ற மூன்றையும் ஆப்பிள் தருகிறது. எல்லோரும் வாங்கும் விலையில் இருக்கும் ஆப்பிளை நாம் தினமும் வாங்கி சாப்பிடலாம் அல்லவா.

வாழைப் பழம்:
பழுத்த வாழைப்பழத்தில் 76சதவிகிதம் நீர்ச் சத்தும், 20சதவிகிதம் சர்க்கரைச் சத்தும், 12சதவிகிதம் புரதச் சத்தும் உள்ளது. உடல் நலக்
குறைவால் பலவீனமானவர்கள் படிப்படியாக உடல் நலம்பெற வாழைப்பழம் உதவுகிறது. உடல்தசை நன்கு இயங்க இதி உள்ள பொட்டாசியம் வீரியத்துடன் ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வடர்ஹினரும் தினமும் சாப்பிட வேண்டிய பழம் வாழைப் பழம்.

ஆரஞ்சு:
மூன்று டம்ளர் பால் தரும் கலோரியை விட ஒரு டம்ளர் ஆரஞ்சு சாறு அதிகச் சத்தைத் தருகிறது. ஜீரண உறுப்புகளும் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பட இதில் உள்ள டிலிமோனின் என்ற ஃபைட்
டோ கெமிக்கல் உதவுகிறது. இரத்தம் உறைவதை தடுப்பதால் மாரடைப்பும் தடுக்கபடும் வாய்ப்பு அதிகம் உண்டு அதனால் நீங்கள் தினமும் சாப்பிடவும்.


திராட்சை:
இதயத்தை பாதுகாக்கும் குயர்சிட்டின் என்ற ஃபைட்டோ இரசாயனம் திராட்சைகளில் இருக்கிறது. புற்று நோயைக் குணமாக்கும்
ஃபைட்டோஸ்டெரல்ஸ் என்ற இரசாயனமும் திராட்சையில் இருக்கிறது.


மாதுளம்
பழம்:

இதயத்துக்கும் நெஞ்சு வலிக்கும் சக்தி வாய்ந்த டானிக் மாதுளம் பழம்.
இதிலும் எல்லாஜிக் (ELLAGIC) என்ற புற்று நோய்த் தடுப்பு அமிலம் உள்ளது.

பார்லி தண்ணீர் குடியுங்கள்!

பார்லி தண்ணீர் குடியுங்கள்!


கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே
பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே
குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான
வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
முறையாவது அருந்த வேண்டும்.

இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ்
உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை
நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது.
மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும்
பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது
மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள்.
தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை
ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி
கிடைக்கும்.

இதற்க்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

கர்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில்
கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி
தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
ஒரு கப் குடிக்க வேண்டும்.

காலை உணவை மறவாதீர்கள்! காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும் முக்கியம்

காலை உணவை மறவாதீர்கள்!

காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும்
முக்கியம் அளவோடு சாப்பிடுவதின் மூலம்

நம் உடல் நலத்திற்க்கு மிகவும் நல்லது.

ஆறிலிருந்து எந்த வயதுக்காரரும் காலை
உணவை தவி
ர்க்கக் கூடாது.

முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டால்

அந்த இடைப்பட்ட
15.16மணி நேரத்தில் மூளையில்
குளுகோஸ் தீர்ந்து போயிருக்கும்.


இதுதான் நமக்கு சக்தி தருகிறது மூளை,பசியால்

துடிப்பதால் நமது உடல் கூடுதலாக வேலை செய்து

மாவுச் சத்து ,புரதம், கொழுப்பு போன்றவை உடலில்

எங்கேயாவது சேமிப்பகா இருந்தால் அதை உடனடியாக

உடைத்து எடுத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.


காலையில் தெளிவாக ஒருமுகச் சிந்தனையுடன்

சிந்தித்து நம் கடமையைச் செய்ய வேண்டும்.

அதற்க்கு மூளையில் குளுகோஸ் தேவை

அங்கே சேமிப்பாக குளுகோஸ் இல்லை.


உடல் எடை கூடும் என்பதால் பலர் காலை

உணவை தவிர்க்கிறார்கள் ஆனால் மதியம்

கூடுதலாகச் சாப்பிட்டு விடுகிறார்கள் இதற்குப்

பதிலாக காலையில் சப்பாத்தி,பால் அல்லது

இட்லி, சாம்பார் ஒரு கப் பழச் சாறு இந்த
இரண்டும்
இப்படி சாப்பிட வேண்டும்.

எதுவாக
இருந்தாலும் அந்த உணவு
எண்ணையில்
பொறித்த உணவாக
இருக்கக்
கூடாது இட்லி போல் ஆவியில்
வெந்த
உணவாக இருக்க வேண்டும். அப்படி
உள்ள உணவே
சிறந்தது.

ஆகையால் காலை உணவை மறவாதீர்கள்

அளவோடு சாப்பிடவும் மறவாதீர்கள்.

பழங்கள் சாப்பிடவும் மறவாதீர்கள்.

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்பு

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்பு

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின்

மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?